வாழ்க்கை ஒரு யாகம்

Posted on

வாழ்க்கை ஒரு யாகம் 

*வாழ்க்கை ஒரு யாகம் 
*வாழ்க்கை என்ற யாகத்தைச் செய்ய ஓம குண்டம் வேண்டும் .
*ஓமகுண்டத்தில் இருக்கின்ற முக்கோணம், சதுரம், வட்டம் ஆகிய அமைப்புக்கள் மூலாதாரம்,சுவாதிட்டானம் மணிப்பூரகம் ஆகியவற்றைக் குறிக்கின்றன .
*ஓமகுண்டத்தில் இடப்படுகின்ற ஆரம்ப அக்கினி மூலாக்கினியைக் குறிக்கிறது .
*அந்த ஆரம்ப அக்கினியின் மேல் அடுக்கப்படுகின்ற விறகுகள், சுள்ளிகள்,மூலிகை மரத் துண்டுகள் உடலைக் குறிக்கின்றன
*அக்கினியை வளர்ப்பதற்காக விடப்படுகின்ற நெய் அகங்காரத்தைக் (ஈகோவைக்)(காமாக்கினியைக்) குறிக்கிறது .
*அக்கினியில் போடப்படுகின்ற பொரி ஆக்கபூர்வமற்ற ஆசைகளைக் குறிக்கிறது .
*அக்கினியில் இடப்படுகின்ற முளைக்கத்தக்க நவதானியங்களும்,உயிர்களும்; மூலாக்கினி வளர்கின்ற உடலை நோக்கி   சிவசோதியில் கலந்து இன்பமுறுவதற்காக வருகின்ற பிதிர்களைக் குறிக்கின்றன .
*இனி எமது உடலில் உய்யத்தக்க உயிர் உய்வதற்கான யாகத்தைச் செய்கின்ற நுணுக்கங்களைப் பார்ப்போம் .
*தொடர்ந்து பதிவுகளைக் கொண்டுவர உங்கள் வரவேற்பை ஐந்தாவது நட்சத்திரத்தில் கீழே உள்ள rate this  க்கு நேரே க்ளிக் செய்து ஆர்வப்படுத்துங்கள் .நன்றி .
**********************************

முன்னை யிட்ட தீ முப்புரத்திலே
பின்னை யிட்ட தீ தென் னிலங்கையில்
அன்னை யிட்ட தீ அடிவயிற்றிலே
யானு மிட்ட தீ மூள்க மூள்கவே.(பட்டினத்தார்)

முன்னை யிட்ட தீ முப்புரத்திலே. மூலாக்கினி சிரசை நோக்கி சென்றடையும்.
பின்னை யிட்ட தீ தென்னிலங்கையில்.   காமாக்கினி குறியை நோக்கிச் சென்று  மூலாக்கினியை ஊக்குவிக்கும்.பின்னையிடவேண்டிய தீயை முன்னையிட்டால் சிவசோதியை அணைத்துவிடும்.
அன்னை யிட்ட தீ அடிவயிற்றிலே. அன்னையின் கருவறையிலிருக்கும்போது தொப்புள் கொடியினூடு அடிவயிற்றில் மூட்டப்பட்ட வடமுகாக்கினி.
 யானு மிட்ட தீ மூள்க மூள்கவே.மூலாக்கினியை முதன்மைப் படுத்தி அதில் ஆரம்பித்து மற்றைய அக்கினிகளோடு யாகத்தீயை எமது உடலுக்குள் வளர்க்க வளர்க்க வாக்குப் பலிதமாகும்.
**********************************
மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை 
கூரும்இவ் வானின் இலங்கைக் குறியுறும்
சாரும் திலைவனத் தண்மா மலயத்தூடு
ஏறும் சுழுமுனை இவைசிவ பூமியே.(திருமந்திரம்-2747)
**********************************
மூலாதாரமும் மூலாக்கினியும்
**********************************
எருவிடும் வாசற் கிருவிரல் மேலே
கருவிடும் வாசற் கிருவிரற் கீழே
உருவிடுஞ் சோதியை உள்கவல் லார்க்குக்
கருவிடுஞ் சோதி கலந்துநின் றானே. (திருமந்திரம்584)
மாறா மலக்குதந் தன்மே லிருவிரற்
கூறா இலங்கத்தின் கீழே குறிக்கொண்மின்
ஆறா உடம்பிடை அண்ணலும் அங்குளன்
கூறா உபதேசங் கொண்டது காணுமே(திருமந்திரம்-733)
பிண்டத்துள் உற்ற பிழக்கடை வாசலை
அண்டத்துள் உற்று அடுத்தடுத் தேகிடில்
வண்டிச் சிக்கு மலர்க்குழல் மாதரார்
கண்டிச் சிக்குநற் காயமு மாமே(திருமந்திரம்-736)

கடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பி
இடைவாசல் நோக்கி இனிதுள் இருத்தி
மடைவாயிற் கொக்குப்போல் வந்தித் திருப்பார்க்
குடையாமல் ஊழி இருக்கலு மாமே(திருமந்திரம்-591)

உருவறி யும்பரி சொன்றுண்டு வானோர்
கருவரை பற்றிக் கடைந்தமு துண்டார்
அருவரை யேறி அமுதுண்ண மாட்டார்
திருவரை யாமனந் தீர்ந்தற்ற வாறே(திருமந்திரம்-625)

இன்பக் கலவியில் இட்டொழு கின்றதோர்
அன்பிற் புகவல்ல னாம்எங்கள் அப்பனும்
துன்பக் குழம்பில் துயருறும் பாசத்துள்
என்பிற் பாரசக்தி என்னம்மை தானே.(திருமந்திரம்-1128)

இக்காய நீக்கி யினியொரு காயத்திற்
புக்குப் பிறவாமற் போம்வழி நாடுமின் 
எக்காலத் திவ்வுடல் வந்தெமக் கானதென்
றக்கால முன்ன அருள்பெற லாமே. திருமந்திரம்-2106

*********************************************************

மூலாக்கினி எனப்படுவது ஒரு தீப்பொறி போலாகும்.

அது தானே சுடர் விடாது. அதற்கு எரிபொருள் வேண்டும் .

காமம் தான் ஏற்புடைய எரிபொருள் . 

ஆனால் அந்தக் காமம் மணிபூரகத்தில் வடமுகாக்கினியைத் தாண்டி மூலாக்கினியை அடைய வேண்டும்.

இயல்பாகக் காமம் மணிப்பூரகத்தில் முடங்கி வடமுகாக்கினியை வளர்க்கிறது.

இதனால் உடல் சூடேறுகிறது .உடல் சூடேறுவதைத் தவிர்க்க,

மணிப்பூரகத்தைப் பக்குவப்படுத்த வேண்டும்.

மணிப்பூரகத்தைப் பக்குவப்படுத்த அடயோகம் வழிவகுக்கும்.

அடயோகத்தைத்  தொடர்ந்து செய்துகொண்டு கிரியா யோகம் பயிற்சி செய்ய மணிப்பூரகம் வசப்பட்டு காமாக்கினி மூலாக்கினியில் சொரிந்து மூலாக்கினி சிவாக்கினியாகச் சுடர் விடும்.

சிவாக்கினியைச் சிரசுவரை கொண்டு செல்லக் கிரியா யோகமே சிறந்த மார்க்கம்.( http://www.vaasiyogam.org/)

2 responses »

  1. Sir This site not get open error coming by internet explorer cannot display i checked my side here no problem (window fire wall off) please findout the problem & help me   Thanks & regards   Sridhar.R

    ________________________________

    Reply
    • it was typed on google transliterate.please try to instal tamil font, or try to instal google chrome and that may solve the problem.

      thankyou.
      பரமரகசியம்

      Reply

Leave a comment