வாழ்க்கை ஒரு யாகம்
முன்னை யிட்ட தீ முப்புரத்திலே
பின்னை யிட்ட தீ தென் னிலங்கையில்
அன்னை யிட்ட தீ அடிவயிற்றிலே
யானு மிட்ட தீ மூள்க மூள்கவே.(பட்டினத்தார்)
கூரும்இவ் வானின் இலங்கைக் குறியுறும்
சாரும் திலைவனத் தண்மா மலயத்தூடு
ஏறும் சுழுமுனை இவைசிவ பூமியே.(திருமந்திரம்-2747)
கடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பி
இடைவாசல் நோக்கி இனிதுள் இருத்தி
மடைவாயிற் கொக்குப்போல் வந்தித் திருப்பார்க்
குடையாமல் ஊழி இருக்கலு மாமே(திருமந்திரம்-591)
உருவறி யும்பரி சொன்றுண்டு வானோர்
கருவரை பற்றிக் கடைந்தமு துண்டார்
அருவரை யேறி அமுதுண்ண மாட்டார்
திருவரை யாமனந் தீர்ந்தற்ற வாறே(திருமந்திரம்-625)
இன்பக் கலவியில் இட்டொழு கின்றதோர்
அன்பிற் புகவல்ல னாம்எங்கள் அப்பனும்
துன்பக் குழம்பில் துயருறும் பாசத்துள்
என்பிற் பாரசக்தி என்னம்மை தானே.(திருமந்திரம்-1128)
*********************************************************
மூலாக்கினி எனப்படுவது ஒரு தீப்பொறி போலாகும்.
அது தானே சுடர் விடாது. அதற்கு எரிபொருள் வேண்டும் .
காமம் தான் ஏற்புடைய எரிபொருள் .
ஆனால் அந்தக் காமம் மணிபூரகத்தில் வடமுகாக்கினியைத் தாண்டி மூலாக்கினியை அடைய வேண்டும்.
இயல்பாகக் காமம் மணிப்பூரகத்தில் முடங்கி வடமுகாக்கினியை வளர்க்கிறது.
இதனால் உடல் சூடேறுகிறது .உடல் சூடேறுவதைத் தவிர்க்க,
மணிப்பூரகத்தைப் பக்குவப்படுத்த வேண்டும்.
மணிப்பூரகத்தைப் பக்குவப்படுத்த அடயோகம் வழிவகுக்கும்.
அடயோகத்தைத் தொடர்ந்து செய்துகொண்டு கிரியா யோகம் பயிற்சி செய்ய மணிப்பூரகம் வசப்பட்டு காமாக்கினி மூலாக்கினியில் சொரிந்து மூலாக்கினி சிவாக்கினியாகச் சுடர் விடும்.
சிவாக்கினியைச் சிரசுவரை கொண்டு செல்லக் கிரியா யோகமே சிறந்த மார்க்கம்.( http://www.vaasiyogam.org/)
Sir This site not get open error coming by internet explorer cannot display i checked my side here no problem (window fire wall off) please findout the problem & help me Thanks & regards Sridhar.R
________________________________
it was typed on google transliterate.please try to instal tamil font, or try to instal google chrome and that may solve the problem.
thankyou.
பரமரகசியம்